What happened to the AIADMK that broke the DMK alliance
திமுக கூட்டணியை உடைத்த அதிமுக என்ன நடந்தது..!
திமுகவின் முக்கியமான எம்எல்ஏ மற்றும் ஸ்டாலினின் விருப்பமான முக்கிய அரசு அதிகாரி மற்றும் எடப்பாடி கே பழனிசாமி சென்னையிலிருந்து சேலம் சென்ற விமானத்தில் மூன்று நபர்களும் நடத்திய விவாதம் என்ன.
உதயநிதிக்கு சென்ற உளவுத்துறை ரிப்போர்ட் அப்படியே அமெரிக்காவில் இருக்கும் ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ளார் கேட்டு அதிர்ந்து போய் உள்ளார் ஸ்டாலின் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற நபர்களை வைத்து.
தனியாக உளவுத்துறை ஒன்றை உருவாக்கியுள்ளார் அந்த உளவுத்துறை மூலம் திமுகவின் முக்கிய தலைவர்கள் வரை பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது முக்கியமாக துரைமுருகனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இதனால்தான் துரைமுருகன் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் இருக்கிறது அமெரிக்காவில் இன்பச் சுற்றுலா சென்ற முதல்வரும் கார் பந்தயம் நடத்துவதில் தீவிரமாக இருந்த உதயநிதியும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருந்தார்கள் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இப்பொழுது இருக்கும் உளவுத்துறைக்கு தெரியாமல் தனியாக ஒரு உளவுத்துறையை உருவாக்கி கட்சியில் இருக்கும் அனைத்து முக்கிய தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது,முக்கியமாக அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
திமுகவின் முக்கிய தலைவர்கள் எதனால் அதிமுக பக்கம் சாய்கிறார்கள்
திமுகவின் முக்கிய தலைவர்கள் கடந்த 40 வருடங்களாக திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் கட்சி வளர்வதற்கு அடித்தளமாக இருந்த தலைவர்கள் ஆனால் செந்தில் பாலாஜி என்ற நபர் திடீரென்று உள்ளே நுழைந்து முக்கிய பொறுப்புகளை பெற்றது பழைய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.
ஆட்சி நடத்துவதற்கு அனைத்திற்கும் செந்தில் பாலாஜியிடம் கருத்துக்களை கேட்டதால் உச்சகட்ட கோபத்திற்கு சென்றது முக்கிய தலைவர்கள் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சகித்துக் கொள்ளவும் முடியாமல் ஆட்சி நடைபெற்றது.
எடப்பாடி உளவுத்துறை அவர்களை அணுகிய போது அவர்கள் தங்களுடைய மனக்குமுறலை கொட்டியுள்ளார்கள் இதனை கேட்டறிந்த எடப்பாடி அனைத்திற்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார் அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கூட சந்தோஷமாக இருந்துள்ளார்கள்.
முக்கியமாக கான்ட்ராக்ட் கிடைத்துள்ளது சுதந்திரமாக தொழில் செய்துள்ளார்கள் ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் அவர்களால் அப்படி இருக்க முடியவில்லை கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆட்சிக்கு வந்தாலும் அந்த பணத்தை இன்னும் எடுக்க முடியவில்லை என்பது மனக்குமுறலாக இருக்கிறது.
முக்கிய வருமானமாக இருக்கும் மதுவிலக்கு துறை மின்சார துறை சில துறைகள் திமுகவிடம் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் அடிமட்ட தொண்டர்கள் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்ற சூழ்நிலை இருக்கிறது இதனை சரியாக புரிந்து கொண்ட எடப்பாடி சிவாஜி படத்தில் வருவது போலவே.
ஓய்வு பெற்ற காவல் துறையை வைத்து உளவுத்துறையை உருவாக்கி திமுகவின் முக்கிய தலைவர்களிடம் கீழ்மட்ட தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது அனைத்திற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்,இது இப்பொழுது தெரியாது தேர்தல் நேரத்தில் அனைத்தும் தெரிந்து விடும்.
தமிழ்நாடு முழுவதும் சென்றடைந்த பணம்
2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டசபை தேர்தலுக்கு தற்போது திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் தங்களுடைய பணத்தை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் பரிமாறிக் கொண்டார்கள் ஒரு தொகுதிக்கு குறைந்தது 50 கோடி செலவு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில் திமுக இருக்கிறது.
அதிமுகவும் அதற்கு நிகரான பணத்தை இறக்குவதற்கு தயாராக இருக்கிறது திமுகவின் ஒவ்வொரு நகர்வுகளையும் அதிமுக கண்காணிக்கிறது ஒவ்வொரு நகர்வுகளைப் பற்றி துல்லியமான தகவல்களை அதிமுகவிற்கு திமுகவின் முக்கிய தலைவர்கள் கொடுத்துவிடுகிறார்கள்.
எந்த தொகுதியில் எவ்வளவு பணம் இருக்கிறது அந்த பணம் எப்பொழுது எங்கு இருக்கிறது என அனைத்து தகவலும் அதிமுகவிடம் இருக்கிறது முக்கிய தலைவர்கள் அதிமுகவிற்கு திமுகவில் நடக்கும் மிகப்பெரிய ஊழல்கள் தகவல்களை கொடுத்துள்ளார்கள்.
திமுக தற்போது வலுவாக இருப்பது போல் தெரிந்தாலும் அதிமுகவின் உளவுத்துறை என்பது புகுந்து விளையாடி உள்ளது அதனுடைய வெளிப்பாடுதான் திருமா திமுகவை நோக்கி சரமாரியான தாக்குதலை தொடங்கியுள்ளார்.
திமுகவின் முக்கிய தலைவராக இருக்கும் துரைமுருகனும் அவ்வப்போது கட்சிக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது இங்கு மற்றவர்களின் அறிவுறுத்தலின் படி இருக்கிறது இதை சற்றும் எதிர்பார்க்காத முதலமைச்சர் ஸ்டாலின்.
அதிமுக யாரிடம் எப்படி பேசி உள்ளது என்ன நடந்துள்ளது என்பதை கணிக்க முடியாமல் இருக்கிறது ஏனென்றால் கடந்த ஒரு வருடமாக அதிமுக அமைதியாக இருக்கிறது என்று தமிழக முழுவதும் பேச்சுக்கள் அடிபட்டது.
ஆனால் அதிமுக அமைதியாக உளவுத்துறையை உருவாக்கி திமுகவின் முக்கிய தலைவர்களையும் முக்கியமான திட்டங்களையும் தன் பக்கம் நகர்த்தி உள்ளதை திமுக நம்ப முடியாமல் திகைத்துப் போய் உள்ளது.
முக்கியமாக கூட்டணியை அதிமுக உடைத்து விட்டது இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக பாமகவை அழைத்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறதா நிச்சயம் திருமா திமுகவிடம் இருக்க மாட்டார் என்பதை திமுக உறுதி செய்துள்ளது, அதற்கு பதிலாக பாமகவை அழைத்து விட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறார்.
ஒரே விமானத்தில் பயணம் செய்த மூவர்
திமுகவின் முக்கிய எம் எல் ஏ மற்றும் ஸ்டாலினின் நற்பெயரில் இருக்கக்கூடிய அரசு அதிகாரி எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சென்னையிலிருந்து சேலம் சென்ற விமானத்தில் ஒன்றாக பயணம் செய்துள்ளார்கள்.
அப்பொழுது அவர்கள் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது முக்கியமாக ஆட்சியில் நடக்கக்கூடிய குளறுபடிகள் போன்றவற்றை பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது மேலும் திமுகவை வீழ்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும்.
என்ன செய்யக்கூடாது என்ற தகவல்களை அந்த எம்எல்ஏவும் அரசு அதிகாரியும் எடப்பாடிக்கு வழங்கி உள்ளதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின் திகைத்துப் போய் உள்ளாராம்.
அதிமுக அமைதியாக இருக்கிறது என்று சந்தோசமாக இருந்த திமுக அமைதியாக கட்சியை கூட்டணியை உடைத்து விட்டதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் உள்ளதாம் மேலும் பாமகவும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பத்துடன் இருக்கிறது.
என்ன வழி தெரியாமல் தந்தை மகனும் விழி பிதுங்கி வருகிறார்கள்
பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் நிச்சயம் தோல்வி திமுகவுடன் கூட்டணி வைத்தால் கட்சிக்குள் பலமான எதிர்ப்பு முக்கியமாக நமது சமுதாய மக்கள் வாக்கு செலுத்த மாட்டார்கள் நமக்கு இருக்கிற ஒரே வழி அதிமுக ஆனால் அதையும் தற்போது சிறுத்தை முந்திவிட்டது.
தேர்தலை நினைத்தால் பயமாக இருக்கிறது 2026 ஆம் ஆண்டு தோல்வியை சந்தித்தால் அதன் பிறகு கட்சி பலத்த அடி வாங்கும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் மாற்றுக் கட்சிக்கு சென்று விடுவார்கள் என்ன செய்வது என்று மருத்துவர் புலம்பி வருகிறாராம்.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |