Vikravandi DMK MLA Pugazhendi passed away
விக்கிரவாண்டி திமுகவின் நடப்பு எம்எல்ஏ புகழேந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..!
கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதாக அவருக்கு கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு அவர் நேற்று முன்தினம் தான் சென்னையிலிருந்து தனது சொந்த தொகுதியான விக்கிரவாண்டிக்கு திரும்பினார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார் உடனடியாக அவரை மீட்ட திமுகவின் உடன் பிறப்புக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருடைய உடல் நிலையில் திடீரென்று பாதிப்பு அதிகமானது.
எனவே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கினார்கள் மருத்துவர்கள் இருந்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினார்கள்.
மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியின் உடல் விழுப்புரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணி வரை புகழேந்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும், புகழேந்தின் உடல் நாளை மாலை 4 மணிக்கு சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது, உடல்நிலை பற்றி சிந்திக்காமல் திமுகவின் வெற்றிக்காக தொடர்ந்து பணியாற்றி வந்தவர்.
புகழேந்தி உடல் நலம் பெற்று மீண்டும் திரும்பி வருவார் என்று நம்பிக்கை கொண்டிருந்த நிலையில் புகழேந்தி நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
திருச்சியில் ஜேபி நாட்டாவின் வாகன பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு..!
ஈடு செய்ய முடியாத புகழேந்தியின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |