Various mysteries in the killing of Nellie District Congress President
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலையில் பல்வேறு மர்மங்கள்..!
பொதுவாக திமுக தமிழகத்தில் ஆட்சி செய்தால் தமிழகம் இருண்ட காலத்திற்கு சென்று விடுகிறது 2006 முதல் 2011 வரை செய்த ஆட்சியால் 10 ஆண்டு திமுக வனவாசம் சென்றது.
தற்போது நடக்கும் இந்த ஆட்சியால் மறுபடியும் திமுக வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக இருக்கிறது காரணம் கொலை, கொள்ளை, கஞ்சா போதை, என பல்வேறு சர்ச்சைகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
சமூக வலைத்தளத்தை திறந்து பார்த்தால் கஞ்சா குடித்து காவல் துறையை தாக்கும் இளைஞர்கள் வீடியோ தொடர்ந்து வெளி வருகிறது கஞ்சா குடித்து விபத்து ஏற்படுத்துவது போதை பொருட்கள் பயன்படுத்தி விட்டு இளைஞர்கள் நடு ரோட்டில் மயங்கி விழுவது.
போன்ற பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது இது ஒரு புறம் இருந்தாலும் தன்னுடைய கூட்டணி கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மிகப் பிரபலமான செல்வந்தராக இருக்கும்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்தனசிங் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பாதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்ததும் கொலை நடந்துள்ளது
யார் இந்த கொலையை செய்தார்கள் என்பது காவல்துறைக்கு மர்மமாகவே உள்ளது இதுவரை சிறிய துப்புகூட கிடைக்கவில்லை நெல்லை மாவட்ட செயலாளராக இருக்கும் ஜெயக்குமார் தன்வன்சிங் அவர் கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு.
காவல்துறைக்கு புகார் ஒன்று கொடுத்துள்ளார் அதில் தன்னுடைய வீட்டை சுற்றி மர்ம நபர்கள் உலா வருகிறார்கள் அவர்களால் என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளேன் எவ்வளவு பணம் வாங்கியுள்ளேன் என்பதை பற்றி முழுமையாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்தது மிகப் பெரிய அதிர்ச்சி ஏனென்றால் அவருடைய கால்களில் மின் ஒயர்களால் கட்டப்பட்ட அடையாளங்கள் இருந்தது.
அவருடைய வயிற்றில் இரும்பு தகடு இருந்தது அவருடைய உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது இப்படி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் செல்வாக்கு மிக்க நபர் தொழிலதிபர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கான்ட்ராக்ட் எடுத்து பணி செய்யக்கூடிய நபர் இப்படி பணபலம் அரசியல் பலம் இருக்கக்கூடிய நபரை.
கொடூரமாக கொலை செய்தது யார் என்பது மர்மமாக உள்ளது இத்தனைக்கும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது திமுக நினைத்தால் மிகப்பெரிய தனிப்படை அமைத்து உடனடியாக தீவிர விசாரணைகளையும் மேற்கொள்ள முடியும்.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |