சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இரவில் கொள்ளையர்களின் நடமாட்டம் இருக்கிறது..!There is movement of robbers at night in Attur area of Salem district

There is movement of robbers at night in Attur area of ​​Salem district

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இரவில் கொள்ளையர்களின் நடமாட்டம் இருக்கிறது..!

தமிழகத்தில் ஆங்காங்கே கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது குறிப்பாக இரவில் டவுசர்கள் மட்டும் அணிந்து கொண்டு முகமூடி கொள்ளையர்கள் சுற்றித் திரிகிறார்கள் என செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளிவருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியில் முகமுடி கொள்ளையர்கள் டவுசர் மட்டும் அணிந்து சுற்றும் காட்சிகள் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இதன்பிறகு அந்த பகுதியை  சேர்ந்தமக்கள் அச்சம் அடைந்துள்ளார்கள்.

கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் காவல்துறை இரவில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் டவுசர் மட்டும் அணிந்த கோலத்தில் கொள்ளையர்கள் முகமூடி அணிந்தபடி ஊருக்குள் வந்து கொள்ளையடிக்கும் சம்பவம் தமிழகத்தில் அடிக்கடி நடக்கிறது.

கொள்ளை அடிக்கும் போது தப்பிக்க ஏதுவாக சட்டை அணியாமல் பேண்ட் அணியாமல் இவர்கள் இருக்கிறார்கள் கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் நள்ளிரவில் ஒவ்வொரு வீடாக கதவுகளை தட்டி தனியாக வெளியே வரும் பெண்களை குறிவைத்து.

நகைகளை பறிப்பது, பணங்களை பறிப்பது, செல்போன்களை பறிப்பது அல்லது வீட்டில் புகுந்து கொள்ள அடிக்க முயல்வது என டவுசர் கொள்ளையர்கள் அட்டூழியம் இருக்கிறது அதேபோன்று தாம்பரம் பகுதியிலும் திருப்பூர் பகுதியிலும் சில சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றது.

தற்போது அதேபோன்ற சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் டவுசர் அணிந்து சுற்றியுள்ளார்கள் குறிப்பாக தங்கவேல் என்பவர் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் அங்கு திடீரென்று அலாரமடித்ததால் திரும்பி சென்றுள்ளார்கள்.

அங்கு சி சி டிவி கேமரா இருப்பதையும் கொள்ளையர்கள் பார்த்து வேகமாக தப்பித்து சென்றுள்ளார்கள் இது தொடர்பாக சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளது வெளியாகிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையர்களை பிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த 65 வயதான கந்தசாமி இவர் விவசாயி தன்னுடைய உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று மறுபடியும் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

கோவையில் 12 பள்ளிக் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஈஷா யோகா மருத்துவர் கைது செய்யப்பட்டார்..!

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு லட்ச ரூபாய் பணம் மற்றும் 6 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது இது குறித்த உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக முழுவதிலும் ஆங்காங்கே சிறு சிறு கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது குறிப்பாக செல்போன் பறிப்பு, தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, பாலியல் பலாத்காரம் போன்ற குற்ற செயல்கள் தமிழகத்தில் அதிகமாக நடைபெற்று வருகிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment