The whip Savukku Shankar in the ganja case arrested
சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..!
பிரபல youtube சவுக்கு சங்கர் தேனியில் அதிகாலை 3 மணி நிலவரப்படி கைது செய்யப்பட்டு கோவை அழைத்து வரப்பட்டார் அப்பொழுது காவல் துறை வாகனம் விபத்துக்குள்ளானது அதன் பிறகு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடல் நலனை சோதித்து கைது செய்தது கோவை கிரைம் காவல்துறை.
சவுக்கு சங்கர் அவருடைய உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்ட அவர்களின் மீது தற்போது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதாவது கைது செய்ய சென்றபோது அவருடைய டிரைவர் மற்றும் உதவியாளர் காரை சோதனையிட கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
மேலும் காவல்துறையை ஆபாசமாக திட்டினார்கள் அதையும் மீறி காவல் துறை அவருடைய காரை சோதனை செய்ததில் 400 கிராம் கஞ்சா இருந்தது என காவல்துறை தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறை சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளது அதேபோல் சவுக்கு சங்கர் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது தனியார் சொகுசு விடுதியில் சவுக்கு சங்கரை கோவை கிரைம் காவல்துறை கைது செய்தார்கள் அதன்பிறகு அவருடைய காரை சோதனையிட முயன்ற போது பிரச்சனை ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அப்பொழுது காரில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 400 KG கஞ்சா பேட்லத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள் காவல்துறையினர் பதிவுகள் செய்தார்கள் இதன்பிறகு டிரைவர் ராம் பிரபு ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிசெட்டிபட்டி காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார்கள்.
மேலும் சவுக்கு சங்கர் அவருடைய உதவியாளர் ராஜரத்தினம் டிரைவர் ராம் பிரபு உள்ளிட்ட அவர்களின் மீது காவல்துறை (294)b,353,506(I),8(C),8(W),20(b)(a)(2),29,(1)25,ndps act உள்ளிட்ட 7 கடுமையான பிரிவுகளின் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
சில நாட்களுக்கு முன்பு அவருடைய யூடியூப் சேனலில் பணிபுரியும் நண்பர்கள் பத்திரிக்கையாளர்கள் உதவியாளர்கள் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |