The TNPSC Exam Results will be published soon in the coming time
மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் இளைஞர்கள் எதிர்காலம் பாதுகாக்கப்படும்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகிறார்கள் இந்த தேர்வினை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக தேர்வு எழுதிய பிறகு முடிவுகள் வெளி வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தார்கள் போராட்டம் நடத்தினார்கள் மாணவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து சமூக வலைத்தளங்களில் நேரடியாக அரசுக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள்.
இதனால் அதிர்ந்த அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம் காலதாமதங்கம் ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தார்கள் இருந்தாலும் மாணவர்களின் கோபம் அரசு மீது இருந்தது.
தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை என்றால் பொதுவெளியில் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை வரும் என மாணவர்கள் எச்சரிக்கை செய்தார்கள் அரசு சுதாரித்துக் கொண்டது குறிப்பிட்ட காலம் டைம் கேட்டது அதற்கு பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
தற்போது இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் பல்வேறு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குரூப் 1, குரூப் 4 மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்கான பணியிடங்கள் என டிஎன்பிஎஸ்சியில் இருந்து தேர்வு குறித்து அறிவிப்புகளும் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்புகளும் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
தற்போது டிஎன்பிஎஸ்சிக்கு சரியான தலைமை இல்லாமல் இருக்கிறது என்று தொடர்ந்து எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தார்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது தேர்வு எழுதிய இளைஞர்கள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது இது அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுங்கள் என பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது இளைஞர்களும் எங்களுக்கு தேர்வு முடிவுகளை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என அழுத்தத்தை கொடுத்தார்கள்.
மிக வேகமாக செயல்பட தொடங்கிய டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படுகிறது என்று இளைஞர்கள் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்கள் சில நேரங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு கால தாமதம் ஏற்பட்டால்.
தமிழக முழுவதும் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்று இணைந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தீவிர படுத்த வேண்டிய சூழ்நிலை வரும் உடனடியாக முடிவுகளை வெளியிடுங்கள் என இணையதளத்தில் மாணவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
எந்த அரசும் இளைஞர்களை பகைத்துக் கொள்ளாது இளைஞர்கள் ஒன்றிணைந்தால் அரசு கவிழ்ந்து விடும் என்பது அனைவரும் அறிந்தது இதனை உணர்ந்து கொண்ட தமிழக அரசு தேர்வு முடிவுகளை நாங்கள் விரைவில் வெளியிடுகிறோம் என அறிவித்தது.
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது 20 லட்சம் நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்தார்கள் 15 லட்சம் நபர்களுக்கு மேல் தேர்வு எழுதியுள்ளார்கள் இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆகும் என பல்வேறு இணையதளங்களில் செய்திகள் வெளிவந்தது.
ஆனால் டிஎன்பிஎஸ்சி அமைதியாக இருந்தது திடீரென்று குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது எந்த தேதியில் வெளியிடப்படும் என்பதை அறிவிக்கவில்லை இது இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TNPSC பொது அறிவு தமிழ்நாடு புவியியல் முக்கியமான வினா விடைகள்..!
10000 பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது அதற்காக பல்வேறு நடைமுறைகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
தானியங்கி முறையில் வினாத்தாள்கள் திருத்துவதற்கு கணினி பயன்படுத்தப்படுகிறது இனிவரும் காலங்களில் தேர்வு முடிவுகள் மூன்று மாதம் அல்லது நான்கு மாதத்திற்குள் வெளியிடப்படும் தேர்வு எழுதிய ஆறு மதத்திற்குள் பணி வாய்ப்புகள் பெற்று விடலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |