Shocking news of 7 people from TN died in Kuwait fire accident
குவைத் தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 நபர்கள் பலி அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளியே வந்துள்ளது..!
குவைத் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீயில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகினார்கள் அதில் 7 தமிழர்கள் அடங்கியுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவருகிறது.
இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு வேலை நிமிர்த்தமாக செல்வார்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது முக்கியமாக குவைத்திற்கு இந்தியர்கள் அதிகமாக செல்கிறார்கள்.
காரணம் இந்திய நாட்டு மதிப்பிற்கும் குவைத் நாட்டின் பண மதிப்பிற்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளது நேற்றைய தினம் திடீரென்று தொழிலாளர்கள் தங்கி இருந்த குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் தரைத்தளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென என பரவியது இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீய அணைத்தார்கள்.
ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகவும் பல தொழிலாளர்கள் கடுமையாக காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி இந்தியர்கள் 43 நபர்கள் வரை பலியாகி இருக்கலாம் என செய்திகள் வெளி வருகிறது பலியானவர்களின் உடலை அடையாளம் காண முடியாத நிலைமை உள்ளது.
இதனால் டிஎன்ஏ சாதனை மேற்கொண்டால் மட்டுமே உடல்கள் யாருடையது என்பது தெரிய வரும் இந்த தீ விபத்தில் கேரளா தமிழகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |