தமிழகத்தில் அரசியல் நகர்வு எப்படி இருக்கிறது என்றால் ஆரோக்கியமாக இல்லை..!Jayalalithaa Hindutva leader poll asked people

Jayalalithaa Hindutva leader poll asked people

தமிழகத்தில் அரசியல் நகர்வு எப்படி இருக்கிறது என்றால் ஆரோக்கியமாக இல்லை குறிப்பாக அண்ணாமலை வந்த பிறகு அரசியல் நகர்வில் பல்வேறு மாற்றங்கள் இருக்கிறது.

அரசியல் நகர்வு ஆபாச நகர்வாக மாறிவிட்டது 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் நகர்வு என்பது திமுக அதிமுக தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் இருந்தது 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான் தனித்து நின்று 8சதவீத வாக்கு பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்.

ஆனால் பிஜேபியால் 4 சதவீத வாக்கை பெற முடியவில்லை இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிஜேபி தற்போது வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டிருக்கிறது தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி அதிமுக இது அனைவரும் அறிந்தது 234 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

திமுக கூட்டணி இல்லாமல் எப்பொழுதும் வெற்றி பெற முடியாது ஒருமுறை திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த முறை நிச்சயம் ஆட்சிக்கு வராது ஆனால் அதிமுக அப்படி இல்லை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி.

ஜெயலலிதாவை பார்த்து பயந்த தலைவர்கள்

அண்ணாமலைக்கு என்ன தெரியும் அதிமுக 33 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து உள்ளது கிட்டத்தட்ட 23 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்துள்ளது அதிமுக செய்த திட்டங்களால் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சி பாதையில் இருக்கிறது.

அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அவர்களுடைய கட்சியில் இருக்கும் தலைவர்களின் பெயர்களை சொல்லி தமிழகத்தில் வாக்குகள் கேட்க வேண்டும் ஆனால் அதிமுகவின் கட்சியை வம்பு இழுத்து அதிமுக இருந்தால் மட்டுமே அண்ணாமலையால் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது.

36 சதவீதம் வாக்குகள் வைத்திருக்கும் அதிமுகவால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற முடியவில்லை 4சதவீதம் வாக்குகள் இல்லாத பிஜேபியால் எப்படி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற கேள்வி இருக்கிறது.

பைத்தியம் பிடித்த அண்ணாமலை

பைத்தியக்காரன் போல் அண்ணாமலை உளறி வருகிறார் செல்வி ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என்று பேசி வருகிறார் செல்வி ஜெயலலிதாவை அனைத்து சாதி மத போதகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் ஜெயலலிதாவை யாரும் சாதி அடிப்படையில் பார்த்தது இல்லை மதத்தின் அடிப்படையில் பார்த்தது இல்லை.

ஜூன் மாதத்தில் 5 ராசிக்காரர்களை சனியும் செவ்வாயும் மோசமாகப் பாதிக்கும் அந்த ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம்..!

அனைத்து மக்களும் ஜெயலலிதாவை கடவுளாக வணங்கினார்கள் தற்போதும் வழங்கி வருகிறார்கள் ஜெயலலிதா இருந்திருந்தால் ஆட்சி நன்றாக இருந்திருக்கும் தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று இருக்கும் இப்பொழுது மக்கள் வருத்தப்படுகிறார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment