Edappadi Palaniswami criticized Annamalai and BJP national leaders
இதுதான் சரியான நேரம் நேரடியாக தாக்குதலை தொடங்கிய எடப்பாடி இனி கட்சியின் அனைத்து தொண்டர்களும் கடுமையான தாக்குதலை கொடுக்க தயாராகி விட்டார்கள்.
எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொள்ளாச்சியில் இன்று அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்டது,எங்களுடைய அரசு என்று எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தெரிவித்தார்.
மேலும் அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசியத் தலைவர்களை மறைமுகமாக கடுமையாக விமர்சனம் செய்தார் தமிழகத்தில் புதிதாக பாஜக கட்சிக்கு ஒரு தலைவர் வந்திருக்கிறார் அவர் எப்பொழுதுமே பேட்டி கொடுக்கும் வேலையை மட்டும் செய்கிறார்.
விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் பேட்டி கொடுக்கிறார் அவர் பேட்டி கொடுத்து மக்களை ஈர்க்க பார்க்கிறார் எங்களுக்கும் அதுபோல தெரியும் ஆனால் உண்மையான உழைப்பு என்பது மட்டுமே வெற்றியை கொடுக்கும்.
வாகன பேரணி நடத்துகிறார்கள் ரோடு சோ நடத்துகிறார்கள் தினந்தோறும் காலை மாலை என இருவேளை தவறாமல் பேட்டி கொடுக்கிறார்கள் இதுபோன்று செய்தால் தமிழக மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்கள் அது நிச்சயம் தமிழகத்தில் நடக்காது.
தமிழகத்தில் எப்படி அரசியல் செய்தால் மக்களை கவர முடியும் என்பது இங்கு உள்ள கட்சிகளுக்கு நன்றாக தெரியும் அதிமுக மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சி எங்களால் ஒரு நாளைக்கு பல மணி நேரம் பேட்டி கொடுக்க முடியும்.
அப்படி கொடுத்து என்ன பலன் மக்களுக்கு ஒரு பலன் கிடையாது உண்மையான உழைப்பு மட்டுமே மக்களுக்கு பலன் கிடைக்கும் நாங்கள் நிச்சயம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
தினமும் குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை பணம் கிடைக்கிறது..!
தேர்தல் நெருங்கி விட்டது இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது இது போன்ற நேரத்தில் திடீரென்று அதிமுக பாஜகவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளது பொதுச்செயலாளர் விமர்சனத்தை தொடங்கிவிட்டார்.
கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும் இதுபோன்ற நேரத்திற்காகவே இதுவரை காத்திருந்தார்கள் இனி தினந்தோறும் 2ம் கட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நேரடியாக பாஜகவை விமர்சனம் செய்ய தொடங்கி விடுவார்கள்.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |