AIADMK DMK is continuously winning in the election campaign
எப்பொழுதுமே நாங்கள் தான் தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் அதிமுக திமுக..!
அதிமுக திமுக வெளியிட்ட கட்சிகள் தமிழகத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலை சந்தித்து வெற்றி தோல்வி போன்றவற்றைகளை கடந்து வருகிறார்கள்.
இவர்கள் தமிழ்நாட்டிற்கு பல்வேறு தீங்கு விளைவுகளை ஏற்படுத்தி விட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட புது முகங்கள் களத்திற்கு இறங்கினார்கள் ஆனால் இதுவரை பெரிய மாற்றங்களை இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை.
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக தலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார் அதற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியது.
அதிமுக அமைதியாக இருந்தது
இரண்டு வருடங்களாக அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தினார்.
அப்பொழுது சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் வல்லுநர்கள், அதிமுக இப்படி அமைதியாக இருப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது இல்லை என்ற கருத்தை முன் வைத்தார்கள் இருந்தாலும் அதிமுக அமைதியாக இருந்தது.
கடந்த ஒரு வருடங்களாக அதிமுகவின் அரசியல் வியூகங்கள் அனைவரையும் திகைப்படைய வைத்தது அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அதிமுக மிகுந்த பலவீனமாக இருந்தது பாஜக நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி.
40 தொகுதிகளில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது வெளிப்படையாக அறிவித்தார்கள் திமுகவுடன் மிகப்பெரிய கூட்டணி பலம் இப்படி இருந்த சூழ்நிலையில் தொடர்ந்து சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி.
தற்போது பாஜக இதுவரை சந்திக்காத தேர்தல் பின்னடிவை சந்தித்துள்ளது அதிமுக புதுமையான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு தன்னுடைய பலத்தை மறுபடியும் நிரூபித்துள்ளது.
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களுடைய பலங்களையும் நிரூபித்துவிட்டது ஆனால் பாஜக கட்சியில் பல்வேறு புகைச்சல்கள் உட்கட்சி பூசல்கள் என தொடர்ந்து தினம் தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை விட யாரும் முன்னிலையில் இருக்கக் கூடாது என்று அந்த கட்சியை சேர்ந்த அனைத்து நபர்களையும் மறைமுகமாக தாக்கி வருகிறார்.
நாயனார் அவருடைய பணியாட்கள் கொண்டு சென்ற 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கொடுத்தது அண்ணாமலை டீம் என்று சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இணையதளத்தில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது அண்ணாமலை டீம் அண்ணாமலை இதுபோன்று பாஜக கட்சியில் முக்கியமான நபர்களை காலி செய்து வருகிறார்.
இதனால் வானதி சீனிவாசன், பொன்னார், நாயனார், தமிழிசை சௌந்தரராஜன்,முருகன், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மறைமுகமாக அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள் என்று பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.
வழக்கம்போல திமுகவும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கி ஒரு மாதம் பிரச்சாரம் செய்தார்கள் அதிமுகவும் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து அனைவரையும் வியப்படைய செய்தார்கள்.
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் சற்று சோர்ந்து விட்டார் இந்த முறை அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவ்வளவாக இளைஞர்களை கவரவில்லை பிஜேபியின் தேர்தல் பிரச்சாரம் வழக்கம் போல பல்வேறு சர்ச்சைகளையும் தினந்தோர் பிரச்சனைகளையும் கடந்து செல்கிறது.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |