Youth kills mother and grandfather by poisoning chicken rice
சிக்கன் ரைஸ்ல் விஷம் கலந்து கொடுத்து தாய் மற்றும் தாத்தாவை கொலை செய்த இளைஞர்..!
கள்ளக்காதலுக்காக தன்னுடைய தாய் மற்றும் தாத்தாவை கொலை செய்த இளைஞர் அதிர்ந்தது நாமக்கல் மாவட்டத்தில் இந்த கொலை சம்பந்தமாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியை சேர்ந்த 20 வயது இளைஞர் பகவதி இவர் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார் இவருடைய தாத்தா வீடு எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கருணாநிதி என்ற ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கும் பார்சல் வாங்கி சென்றுள்ளார்.
அந்த சிக்கன் ரைஸ் தன்னுடைய தாத்தா சண்முகநாதனுக்கும் தன்னுடைய தாயார் நதியாவுக்கும் மேலும் சகோதரனுக்கும் கொடுத்துள்ளார் சண்முகநாதன்.
உடனடியாக சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டார் அவருடைய தாத்தா அவருடைய தாயார் நதியா பார்சலை திறந்தபோது வித்தியாசமாக வாசனை வந்ததால் குறைவாக சாப்பிட்டுவிட்டு வேண்டாம் என்று வைத்துள்ளார்.
அதன் பிறகு சண்முகநாதனுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டுள்ளது உடனடியாக நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருடைய தாயாருக்கும் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
அதன் பிறகு அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது இது குறித்து காவல்துறைக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த காவல்துறை விசாரித்த போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் பிரச்சனை என தெரியவந்துள்ளது.
உடனடியாக காவல்துறை ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள் அந்த ஹோட்டலை உடனடியாக சீல் வைத்தார்கள் அந்த ஓட்டலில் அன்றைக்கு மட்டும் 80 சிக்கன் ரைஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது ஆனால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பகவதி வாங்கிச் சென்ற சிக்கன் ரைஸ்சில் குறிப்பிட்ட இரண்டு பார்சல் மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது காவல்துறை தன்னுடைய விசாரணையை பல கோணங்களில் விரிவுபடுத்தியது அதில் பகவதியும் சேர்த்துக் கொண்டு விசாரணை செய்ததில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது..
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த தாய் மற்றும் தாத்தா
ஏற்கனவே திருமணம் நடைபெற்ற பெண்ணுடன் பகவதி தவறான உறவிலிருந்து குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது இது குறித்து கடுமையான விவாதம் குடும்பத்தில் நடைபெற்று உள்ளது தாத்தாவும் பகவதி தாயும் கடுமையாக இதனை எதிர்த்து உள்ளார்கள்.
உடனடியாக இதுபோன்ற தவறான பழக்கத்தை கைவிட வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்கள் ஆனால் இதனை மறுத்துள்ளார் பகவதி தொடர்ந்து குடும்பத்தில் இது தொடர்பான பிரச்சனைகள் தினம் தோறும் அரங்கேறி வந்துள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே பகவதி வாங்கிய சிக்கன் ரைஸ்சில் இரண்டு பார்சலில் மட்டும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்துள்ளார் என்று காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்த கோடையில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி..!
கள்ளக்காதலுக்காக தன்னுடைய சொந்த குடும்பத்திற்கு விஷம் வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது செவ்வாய்க்கிழமை இரவே அவருடைய தாத்தா சண்முகநாதன் உயிரிழந்து விட்டார் அவருடைய தாயார்.
நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் இதை கொலை வழக்காக பயந்து செய்துள்ள காவல்துறை தற்போது பகவதியை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |