Minister Udhayanidhi Stalin came forward with severe criticism about Annamalai
அண்ணாமலை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்..!
தமிழகத்தில் அரசியல் களம் ஒவ்வொரு நாளும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது, ஒவ்வொரு கட்சிணரும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன்னுடைய பிரச்சாரக் கூட்டத்தில் துல்லியமான தகவல்களுடன் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார், அவ்வப்போது மறைமுகமாக பிஜேபியும் விமர்சனம் செய்து வருகிறார்.
தமிழக முதலமைச்சர் திமுக ஸ்டாலின் அவர்கள் பிஜேபியை நேரடியாக விமர்சனம் செய்கிறார் மற்றும் அவ்வப்போது அதிமுகவையும் அதிமுக பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
அதில் தமிழகத்திற்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் விமர்சனமாக முன்வைத்து வருகிறார் இப்படி அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருவதால் தமிழகத்தில் அரசியல் போக்கு என்பது.
தற்போது அதிமுக மற்றும் திமுக என்ற நிலைக்கு சென்று விட்டது பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே யார் 3வது இடத்திற்கு யார் வருகிறார்கள் என்ற போட்டி நிகழ்ந்து வருகிறது.
திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்
திமுக சார்பில் தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி நேரடியாக விமர்சனம் செய்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றார் என்று அவ்வப்போது விமர்சனத்தை முன் வைப்பார் இதற்கு அதிமுக தரப்பில் இருந்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு விமர்சனம் முன்வைக்கப்படும்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை 29 பைசா மோடி என்று விமர்சனம் செய்தார், இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உதயநிதி பற்றியும் விமர்சனம் செய்தார் அதாவது உதயநிதி கஞ்சாநிதி என்று விமர்சனம் செய்தார்.
05.04.2024 அன்று திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கூட்டத்திலிருந்து திமுக தொண்டர் ஒருவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேசியுள்ளார் உடனடியாக திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அந்த ஆள் பெயரை எல்லாம் சொல்லாதீர்கள் அந்த அளவுக்கு அந்த ஆள் வெர்த்தே கிடையாது ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம் என கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கே பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகிறார்கள்.
அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்ற கட்சியில் உள்ள முக்கியமான தலைவர்களை பற்றி தரம் தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்துகிறார்.
திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..!
இனி வரும் நாட்களில் நாங்களும் திமுகவின் முக்கியமான தலைவர்கள் மற்றும் தற்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களையும், உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் பற்றி தரம் தாழ்ந்த வார்த்தைகளை.
இனிவரும் நாட்களில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும்,என்று சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |