Woman gang raped by 5 persons near Manamadurai
மானாமதுரை அருகே 5 நபர்களால் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் திராவிட மாடல அரசின் மற்றொரு சாதனை..!
தமிழகத்தில் வரலாற்றில் இல்லாத அளவில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது இதனால் பல உயிர்கள் பிரிந்தது குறிப்பாக கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 69 நபர்கள் உயிரிழந்தார்கள்.
எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது கஞ்சா பழக்கம் என்பது இதுவரை இல்லாத அளவில் இருக்கிறது சென்னை முழுவதும் எளிமையாக கஞ்சா பழக்கம் இருக்கிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் பாலியல் வன்கொடுமையில் என்பது தமிழகத்தில் உச்சகட்டத்தில் இருக்கிறது குறிப்பாக உள் மாவட்டங்களில் பாலியல் வன்கொடுமை உச்சகட்டத்தில் இருக்கிறது இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் பெண் கொலை செய்யப்பட்டு.
சூட்கேஸில் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருந்தது தொடர்ந்து கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது தற்போது மானாமதுரை அருகே 5 போதை ஆசாமிகளால் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளியில் கசிந்துள்ளது.
மானாமதுரை அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணை 5 நபர்கள் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விசாரணை தொடர்ந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த 5 நபர்கள் போதையில் இருந்துள்ளார்கள் அந்த ஆண் நண்பரை தாக்கி விட்டு.
பெண்ணை தூக்கி சென்றுள்ளார்கள் அந்த 5 பேரும் பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு இதைப் பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளார்கள்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞர் சிவகங்கை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் அப்போது அடிபட்ட காயம் இருந்ததால் மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள் விரைந்து வந்த காவல் துறை விசாரணை நடத்தியதில்.
முன்னுக்கு பின்னான பதிலை தெரிவித்துள்ளதால் மேலும் விசாரணையை தீவிர படுத்தியதில் முழு விவரம் வெளியில் தெரிய வந்துள்ளது அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காவல்துறை புகாரை பெற்றுள்ளார்கள்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு புளியங்குளத்தை சேர்ந்த முத்துக்குமார் உள்ளிட்டு 5 நபர்களை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெளியே வரும் பாலியல் குற்றங்களால் தமிழ்நாடே அதிர்ந்து போய் உள்ளது.
திராவிட மாடல் அரசு பவள விழா, கார் பந்தயம், உல்லாச சுற்றுலாவில் இன்பமாக இருக்கிறது ஆனால் தமிழக மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள் கிருஷ்ணகிரியில் 17 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி ஆசிரியர்.
திருச்சியில் 6 மாதமாக குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை செய்த அரசு மருத்துவர், தஞ்சையில் கூட்டு பாலியல் பலாத்காரம், இரவில் 43 வயது பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம், இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் போதை நடமாட்டம் பாலியல் பலாத்காரம் கொலைகள் என தமிழகம் உச்சகட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் இருக்கிறது.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |