Teacher arrested under POCSO Act for speaking obscenity to school girl
பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெளிவரும் செய்திகளை கேட்டு அறிந்தால் அதிர்ச்சியாகவும் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் பயமாக இருக்கிறது முக்கியமாக இந்த விடியா திமுக ஆட்சியில்.
பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு என்பது மிக அதிகமாக இருக்கிறது தற்போது கோவையில் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்.
அறிவியல் ஆசிரியர் ஒருவர் 9ம் வகுப்பு பள்ளி மாணவிகளிடம் இரவு 11 மணிக்கு வாரேன் பாயை எடுத்து வை எனக் கூறியதை அடுத்த அந்த ஆசிரியர் மீது தற்போது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்.
பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்த நாராயணசாமியின் மகன் அய்யாசாமி இவருக்கு வயது 39 நடைபெறுகிறது நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் அறிவியல் நடைமுறை வகுப்பு எடுக்க இந்த பள்ளிக்கு அய்யாசாமி வந்துள்ளார்.
அப்போது 7ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுத்துள்ளார் அந்தப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் சார் எங்கள் கிளாசுக்கு எப்ப வருவீங்க என கேட்டுள்ளார் அதற்கு அந்த ஆசிரியர் அய்யாசாமி இதோ 11 மணிக்கு வாரேன் பாயை எடுத்து வை என ஆபாசமாக பேசி உள்ளார்.
இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த மாணவிக்கு உதவியாக பள்ளி தலைமை ஆசிரியர் இருந்துள்ளார் இது குறித்து காவல்துறை சோபியா ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்திய நிலையில்.
அவர் அந்த மாணவியரிடம் அதுபோன்ற போன்ற ஆபாசமான வார்த்தை பேசியது தெரியவந்துள்ளது தற்போது அந்த அறிவியல் ஆசிரியர் அய்யாசாமி poco சட்டத்திற்கு கீழ் கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்கள் திராவிட மாடல் அரசு என்று சொல்கிறார்கள்.
ஆனால் பள்ளிகளில் நடக்கும் குற்றங்கள் என்பது இந்த ஆட்சியில் அதிகமாக இருக்கிறது போலி என்சிசி முகாம் நடத்தி 17 பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்கள்.
திருச்சியில் அரசு மருத்துவர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரும் விடுதியில் தங்கும் சிறு பிள்ளைகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார் ஆறு மாதமாக.
கோவையில் பள்ளி மாணவர்கள் மூன்று நபர்கள் பள்ளி அறையில் மது அருந்தினார்கள், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் கொடுமையான ஆயுதங்களால் ஆசிரியரை மிரட்டினார்கள்.
நாங்குநேரி பகுதியில் பள்ளியில் இரண்டு சாதிப் பிரிவினர் மாணவர்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது நாங்குநேரியில் 10ம் வகுப்பு படித்த மாணவனை அவருடைய சக மாணவர்கள் வெட்டினார்கள், நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு மாணவர் உயிரிழப்பு.
தற்போது கோவையில் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் பள்ளிக்கும் பாதுகாப்பு இல்லை சரியான சட்ட ஒழுங்கு இல்லை தமிழகத்தில்.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |